ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தற்போது உணவு டெலிவரி செய்யும் துறையிலும் இறங்கி உள்ளது. இதனால் ஏற்கனவே இந்த துறையில் உள்ள ஸ்விகி, ஜொமாடோ ஆகிய நிறுவனங்களுக்கு பலத்த போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
அமேசான் நிறுவனம்:
அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களை ஷாப்பிங் செய்யும் எங்களது வாடிக்கையாளர்கள், அமேசானில் தயாரிக்கப்பட்ட உணவுகளையும் கூடுதலாக ஆர்டர் செய்ய பல காலமாக விரும்புவதாக அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். இதனால் இந்த துறையில் அமேசான் இறங்கி உள்ளது. இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் உணவு தொழில் 3 பில்லியனில் இருந்து 15 பில்லியன் டாலராக மாறும் என ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ஸ்விகி, ஜொமாடோ ஆகிய நிறுவனங்கள் ஊரடங்கு காரணமாக தொழில் வீழ்ச்சி அடைந்த காரணத்தால் பணியாட்களை வேலையை விட்டு நீக்கி வருகின்றனர். இந்த நிலையில் அமேசான் நிறுவனம் உணவு டெலிவரி துறையில் இறங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் வணிக ஆலோசனை நிறுவனம் ரிசர்ச் பியூச்சர் நடத்திய ஆய்வில் இந்தியாவில் 16 சதவீதத்திற்கும் அதிகம் வளர்ச்சியடைந்து 17.02 பில்லியன் டாலரை எட்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |