இந்திய திரையுலகில் நடிகர், டான்ஸ் மாஸ்டர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையோடு ஜொலித்து கொண்டிருப்பவர் தான் பிரபு தேவா. இப்படி சினிமாவில் திறமைகளோடு ஜொலித்துக் கொண்டிருக்கும் இவர் தன்னிடம் டான்ஸ் கற்று வந்த ரம்லத் என்ற முஸ்லீம் பெண்ணை காதலித்து திருமணம் முடித்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இப்படி தனது காதல் மனைவியுடன் மகிழ்ச்சியாக தனது வாழ்க்கையை வாழ்ந்து வந்த இவரது மகன் ஒருவர் திடீரென உயிரிழந்தார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக கணவன் மனைவிக்கிடையில் பிரச்சனை எழுந்துள்ளது. இதுபோக முஸ்லீம் மதத்தில் இருக்கும் ரம்லத்தை இந்துவாக மாற சொல்லி பிரபுதேவா வற்புறுத்தியிருக்கிறார். அதன் பிறகு தான் வில்லு திரைப்படத்தை இயக்கும் போது நயன்தாராவுடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. மேலும் அவ்வப்போது பொது நிகழ்ச்சியில் ஜோடியாக கலந்து கொள்வதும், பிரபு தேவாவின் பெயரை நயன் தன் கையில் பச்சை குத்துவதுமாக இருந்து வந்தார்.
இந்த விஷயத்தை ரம்லத் பிரச்சனை செய்ததால் , நயன்தாராவுடன் இருந்த தனது உறவை பிரபு தேவா முறித்துக் கொண்டுள்ளாராம் . இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்த நயன்தாரா, பிரபு தேவாவை வெறுத்து ஒதுக்கி விட்டார். இப்படி முதல் மனைவியை விட்டு, நயன்தாராவுடன் உறவு வைத்துக் கொண்ட பிரபு தேவா, இதன் பின்னர் ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.