கடந்த மாதம் தமிழகத்தில் நடைபெற்ற 10 ஆம், 11 ஆம் வகுப்புக்கான பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 10 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய 9,14,320 மாணவர்களில் 8,35,614 தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்த தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களே., பதவி உயர்வுக்கு TET தேர்வு தகுதி தேவையில்லை?? வெளியான தகவல்!!!
இந்நிலையில் தேர்வு முடிவு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் மாணவர்களின் சேர்க்கையும் இந்த ஆண்டு அதிகரித்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதைத் தொடர்ந்து பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தம் கொடுக்கவோ, திட்டவோ வேண்டாம். அவர்களுக்கு இந்த ஆண்டே துணை தேர்வு நடைபெற இருப்பதால் தேர்ச்சி பெற்று உயர்கல்விக்கு சென்று விடுவார்கள். எனவே தோல்வி அடைந்த மாணவர்களுக்கு இந்த நேரத்தில் பெற்றோர்கள் தான் ஆறுதலாக இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்