சன் டிவியில் அண்ணன் தங்கை பாசத்தை உணர்த்தும் விதமாக வானத்தைப்போல சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் ஆரம்பத்தில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை என்றாலும் இப்போது முன்னணி சீரியல்களில் ஒன்றாக உருவெடுத்து விட்டது. இதில் துளசிக்கு கரு கலைந்த விஷயம் குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் தெரிய வர அதிர்ச்சியாகின்றனர். குடும்பத்தில் இதை வைத்து ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த 7 தொகுதிகளில் வருகிற செப்டம்பர் மாதம் இடைத்தேர்தல்., தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியீடு!!!
இதனால் சீரியல் அடுத்து எதை நோக்கி நகரும் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. இப்படி இருக்கையில் சமீபத்தில் இந்த சீரியலில் ரோஜா தொடரில் நடித்த ஷாமிலி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்போது இதைத் தொடர்ந்து பாண்டவர் இல்லம், அழகு போன்ற சீரியல்களில் நடிக்கும் நரேஷ் ஈஸ்வர் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர் என்ன ரோலில் நடிக்க போகிறார் என்ற என்று தெரியவில்லை. மேலும் வானத்தைப்போல சீரியலில் நரேஷ் என்ட்ரி கொடுப்பதால் பாண்டவர் இல்லம் தொடரில் நடிப்பாரா?? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.