தற்போது சன் டிவி டிஆர்பியை உச்சத்தில் வைத்திருக்கும் சீரியலாக இருந்து வருகிறது எதிர்நீச்சல் சீரியல். இப்படி இந்த சீரியலை மக்கள் கொண்டாடி வருவதற்கு காரணம் குணசேகரன் கதாபாத்திரம் தான். அந்த அளவுக்கு நடிகர் மாரிமுத்து கேரக்டர் மக்களிடையே பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு யூடுப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, இயக்குனர் திருமுருகன் எதிர் நீச்சல் சீரியல் கதையை என்னிடம் கிட்டத்தட்ட 3 மணி நேரம் கூறினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதில் குணசேகரன் கதாபாத்திரத்தில் எனக்கு மிகவும் பிடித்து போனது. அதனால் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். மேலும் எனக்கு திருப்தி வர வரைக்கும் ஒரு காட்சியை நடிப்பேன். அதான் நான் சினிமாவில் கற்று கொண்டது. அதுமட்டுமின்றி உண்மையான குணசேகரன்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள். ஏன் சொல்ல போனால் சுரண்டை ஊரில் ஒருவர் இருக்கிறார் என்று கூறியுள்ளார். அவர் பேசியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.