கோலிவுட் திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நகைச்சுவை கலைஞராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் வடிவேலு. இவர் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான படம் தான் மாமன்னன். உதயநிதி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஏ. ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகியிருந்தது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படத்தில் மாமன்னனாகாவே நடித்திருந்த வடிவேலு தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரள வைத்திருந்தார். மேலும் வசூலில் வெற்றி கண்டு வரும் இப்படத்தில் வடிவேலு கேரக்டரில் நடிக்க வைக்க, முதலில் நடிகர் சார்லியை தான் மாரி செல்வராஜ் முடிவு செய்திருந்தாராம். ஆனால் இந்த படத்தில் நடிக்க வடிவேலு ஒப்புக்கொண்டதால் சார்லியை மாரி செல்வராஜ் அணுகவில்லையாம்.