மத்திய மாநில அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அவ்வப்போது விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு பணியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள், தங்களது நிர்வாகம் தொடர்பான எந்த ஒரு பொருளையும் வெளியிடக்கூடாது. அதேபோல் கடுமையான குற்ற செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது மோசமான நடத்தையில் ஈடுபட்டதாக நிரூபிக்க பட்டாலோ, அவர்களின் ஓய்வூதியம் குறிப்பிட்ட சில காலம் அல்லது நிரந்தரமாக நிறுத்தி வைக்கலாம் என திருத்தப்பட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.