நடிகர் விஜய் அவர்களின் 67 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இப்படத்தின் அப்டேட் வாரிசு திரைப்படம் வெளியீட்டுக்கு பின் அறிவிக்கப்படும் என லோகேஷ் அண்மையில் கூறியிருந்தார். இவர் இயக்கத்தில் உருவாகும் thalapathy 67 ஆக்சன் கலந்த க்ரைம் மூவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் இப்படத்தில் 7 வில்லன் கதாபாத்திரத்தில் ஏற்கனவே மன்சூர் அலிகான் மற்றும் இயக்குனர் கவுதம் மேனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் வைத்து எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதியின் 67 வது படம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
அஜித் ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ்.., AK 62 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம்!!
அதில் ”தளபதி 67 படப்பிடிப்பு இன்று தொடங்கியது. லோகேஷ் மற்றும் எங்க தளபதியை சந்தித்தேன். அதே ஆற்றலுடன் முழு வீச்சில்.., முதல் நாள் படப்பிடிப்பில்” என பதிவிட்டுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு 10 நாட்கள் நடைபெறும் எனவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.