நடிகர் மனோ பாலா சமீபத்தில் உயிரிழந்த நிலையில் அவருடைய மனைவி செய்திருக்கும் காரியம் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
மனோ பாலா:
தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது கெரியரை தொடங்கி,குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெயர் போனவர் தான் நடிகர் மனோ பாலா. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கல்லிரலில் ஏற்பட்ட பிரச்சனையால் பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இவர் கடைசியாக விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிவதற்குள்ளேயே அவரின் ஆயுள் காலம் முடிந்தது அனைவருக்கும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய மனைவி செய்திருக்கும் காரியம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விபத்தில் சிக்கிய ரக்ஷிதா கார்.., உயிர் பிழைத்த நிலையில் அவரே போட்ட பதிவு!!
அதாவது நடிகர் மனோ பாலாவின் குடும்ப முறைப்படி இறந்தவர்களின் ஆடைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் தீ வைத்து எரித்துவிடுவார்கள். ஆனால் மறைந்த மனோ பாலாவின் ஆடைகளை அவருடைய மனைவி ட்ரஸ்டில் கொடுத்துள்ளார். அவரின் நியாபகமாக மனோ பாலாவின் வாட்சை மட்டும் எடுத்துக் கொண்டாராம். தற்போது அவர் செய்த காரியம் இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.