தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராகும் விதமாக தடையில்லாத மின்சாரத்தை மின்வாரியம் வழங்கி வந்தது. தற்போது தேர்வு முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் இதுவரை நிறுத்தி வைத்திருந்த மின்தடையுடன் கூடிய பராமரிப்பு பணி மீண்டும் செயல்பட தொடங்கி உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் திருச்சி மாநகரில் கம்பரசம்பேட்டை, மெயின் கார்டு கேட், இ.பி. காலனி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (மே 9) பராமரிப்பு பணி நடைபெற உள்ளதாக மின்வாரிய அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த மின் நிலையங்களின் வட்டாரத்திற்குட்பட்ட குறத்தெரு, நெசவாளர் காலனி, பூசாரித்தெரு சர்க்கார்பாளையம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை பின்வரும் பகுதிகளில் மின்தடை செய்ய உள்ளனர்.
தமிழகத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கோடை விடுமுறை., குழந்தைகள் மறக்காம வாங்கிக்கங்க??
இப்பகுதியை சேர்ந்தவர்கள் தகுந்த முன்னேற்பாடுகளை மேற்கொண்டு மின் தடையை சமாளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.