நடிகர் தனுஷ் போயஸ் கார்டனில் அமைந்துள்ள வீட்டில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ்
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர் என கலக்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். தற்போது இவர் நடிப்பில் தெலுங்கு, தமிழில் வெளியான வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலை அள்ளி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் ஆயிரத்தில் ஒருவன், கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். ஆனால் தனுஷின் கெட்டப்பை வைத்து பார்க்கும் பொழுது அவர் தற்போது ஆயிரத்தில் ஒருவன் படப்பிடிப்பில் அவ்வப்போது சென்று வருவதாக தெரிகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இப்படி தனுஷ் படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வந்தாலும், ரியல் வாழ்க்கை படு மோசமாக தான் இருந்து வருகிறது. தனது மனைவியான ஐஸ்வர்யா ரஜினிகாந்துடன் சேர்ந்து வாழாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். அவர்கள் எப்போது சேருவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அவர்கள் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்துவதை வேலையாக வைத்து வருகிறார் ரஜினிகாந்த்.
மறைந்த நடிகர் மயில்சாமியின் கடைசி மணித்துளிகள்.., கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்!!
இந்த நிலையில் தனுஷ் போயஸ் கார்டனில் அமைந்துள்ள வீட்டில் மகா சிவராத்திரி கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா அதில் இல்லாததை கண்டு ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவர்கள் சென்ற வருடம் போல் ஒன்றாக சேர்ந்து இந்த வருடம் மகா சிவராத்திரியை கொண்டாடி இருந்தால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறி வருகின்றனர்.