சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கைல் ஜேமிசன், அணியில் இருந்து விலக உள்ளதை அடுத்து, இவருக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதில், 3 வீரர்கள் பரிந்துரையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
CSK வீரர்
இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் 16 வது சீசனுக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த சீசன் தொடங்க உள்ள மார்ச் 31ம் தேதியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர். அதாவது, இந்த சீசனின் முதல் போட்டியே, CSK மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதே ஆகும்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில், தான் CSK அணிக்கு ஓர் அடி வீழ்ந்தது போல, ஒன்று நிகழ்ந்து உள்ளது. அதாவது, நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் கைல் ஜேமிசன் எதிர்வரும் சீசனுக்காக CSK அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது முதுகு வலியால் அவதிப்பட்டு வரும் இவர், அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளார். இதனால், இவர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
“பல கேப்டன்கள் மாறினாலும் சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் இல்லை”…, கொந்தளிக்கும் ரசிகர்கள்!!
இவரது இடத்தை நிரப்புவதற்காக தற்போது CSK அணி நிர்வாகம் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. பந்து வீச்சாளரான கைல் ஜேமிசன் இடத்திற்கு, இங்கிலாந்தின் கிறிஸ் ஜோர்டான், நியூசிலாந்தின் ஆடம் மில்னே மற்றும் இந்தியாவின் சந்தீப் சர்மா ஆகிய மூவரில் யாராவது ஒருவரை CSK நிர்வாகம் தேர்வு செய்யக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவலை CSK அணி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.