தமிழகத்தில் இல்ல தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பை முன்னாள் மத்திய அமைச்சர் பா சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில் இல்ல தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என ஆளும் அரசு தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது. அந்த வகையில், தற்போது இந்த திட்டம் குறித்த அறிவிப்பு ஒன்றை முன்னாள் மத்திய அமைச்சர் பா. சிதம்பரம் வெளியிட்டுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளரான ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் வன்முறையும் வேலையின்மையும் அதிகரித்து வருவதாக குற்றம் சுமத்தினர்.
தமிழக பட்டதாரி, முதுநிலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு.., மாவட்ட CEO ஒப்புதல் தாமதம்!!!
அது மட்டும் இல்லாமல், இதனைத் தொடர்ந்து, இல்லத்தலைவி களுக்கு மாதம் ரூபாய் 1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வருகிற மார்ச் மாதம் தொடங்கும் என அறிவித்தார். வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் எனவும், இதனால் பல லட்சம் இல்ல தலைவிகள் பயனடைவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.