இந்தியாவில் நடைமுறையில் உள்ள பொது போக்குவரத்துக்களில் ரயில் பயணங்களை பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதனால் தான் என்னவோ? ரயில் பயணிகளுக்கு எளிதில் முன்பதிவு டிக்கெட் கிடைப்பது என்பது சிக்கலாக உள்ளது. அதுவும் பண்டிகை காலங்கள் என்றால் சில மாதங்களுக்கு முன்னதாகவே முன்பதிவு டிக்கெட் தீர்ந்து விடுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் பெரும்பாலான மக்கள் ஏமாற்றத்துக்குள்ளாகி வருகின்றனர். இந்த அவல நிலையை போக்க VIKALP என்ற வசதியை 2015ம் ஆண்டு IRCTC நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்ஷன் பயணிகள் தங்கள் பயண முன்பதிவின் போது திரையில் தோன்றும். இதை கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்லும் மற்ற ஏழு ரயில்களின் பட்டியலை திரையில் காண்பிக்கும்.
இப்படி தோன்றும் பட்டியலில் தங்களுக்கு தகுந்த நேரத்திற்கான ரயில்களை பயணிகள் தேர்வு செய்து Submit ஆப்ஷனை கொடுக்கலாம். இதன் மூலம் விரைவில் முன்பதிவு டிக்கெட் உறுதி செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது. அப்படி பயணிகளுக்கு விருப்பமில்லாத பட்சத்தில் முன்பதிவு History க்கு சென்று தேர்ந்தெடுத்த டிக்கெட்டினை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.