பறிபோன கே எல் ராகுல் பதவி.., வருங்கால இந்திய கேப்டனை உருவாகும் பிசிசிஐ!!

0
பறிபோன கே எல் ராகுல் பதவி.., வருங்கால இந்திய கேப்டனை உருவாகும் பிசிசிஐ!!
பறிபோன கே எல் ராகுல் பதவி.., வருங்கால இந்திய கேப்டனை உருவாகும் பிசிசிஐ!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இதில், கே எல் ராகுல் இடம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கே எல் ராகுல்

இந்தியா அணியானது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடி முடித்த பிறகு, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் நாள் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர்கள் முறையை, மார்ச் 17, 19 மற்றும் 22ம் தேதிகளில், மும்பை, ஆந்திர பிரதேசம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடருக்கான, இந்திய அணியை பிசிசிஐயானது சமீபத்தில் அறிவித்தது. இதற்கான இந்திய அணியை, ரோஹித் சர்மா தலைமை தாங்க உள்ளார். இவர், முதல் போட்டியில் மட்டும், தனது குடும்ப காரணமாக பங்கு பெற மாட்டார் என தகவல் வெளியானது. இதனால், ஹர்திக் பாண்டியா முதன் முதலாக, ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை வழிநடத்த உள்ளார்.

IPL 2023: CSK அணியில் இடம் பெற 3 வீரர்களுக்கிடையே போட்டி.., இறுதியில் யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு??

இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில், கே எல் ராகுல் இடம் பெற்றிருந்தாலும், துணை கேப்டனான இவரது பதவி பறிபோகி உள்ளது. இவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முக்கிய காரணம் கே எல் ராகுலின் சமீபத்திய பார்ம் ஒரு காரணமாக இருந்தாலும், மற்றொரு காரணமாக இந்திய அணியின் வருங்கால கேப்டனாக ஹர்திக் பாண்டியாவை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here