தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என நீண்ட நாட்களாக ஆவின் நிறுவனத்திடம் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த கோரிக்கை பரிசீலிக்க படாததால் பலரும் அதிக விலைக்கு தனியார் நிறுவனத்திற்கு கொள்முதலை வழங்கினர். இதனால் ஆவின் நிறுவனத்திற்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதையடுத்து பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் கொள்முதல் விலையை உயர்த்தியதால், ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தக் கூடாது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பால் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், மீண்டும் உயர்த்தினால் பால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.