தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நாளை (டிச.15) வெளியீடு., புதியவர்களுக்கு ரூ.4,000? வெளியான முக்கிய தகவல்!!!

0
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 நாளை (டிச.15) வெளியீடு., புதியவர்களுக்கு ரூ.4,000? வெளியான முக்கிய தகவல்!!!
தமிழகத்தில் கலைஞர் மகளிர் திட்டத்தின் மூலம் 1.06 கோடி தகுதியான குடும்ப தலைவிகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் பேரில், முதற்கட்டமாக 7.35 லட்சம் பேருக்கு விடுபட்ட மாதங்களை சேர்த்து கடந்த மாதம் ரூ.3,000ஆக உரிமை தொகை வரவு வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு (டிசம்பர்) மாதத்திற்கான தவணை நாளை (டிச. 15) வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் இன்னும் கூடுதல் குடும்ப தலைவிகள் புதிதாக இணைக்கப்பட்டு, அவர்களுக்கு 4,000 ரூபாய் உரிமை தொகை வரவு வைக்க உள்ளதாக தகவல் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here