மத்திய அரசின் பல்வேறு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை தேர்வானமானது போட்டித் தேர்வுகளின் அடிப்படையில் நிரப்பி வருகிறது. இந்நிலையில், ரயில்வே துறையில் இருந்து சுமார் 2.94 லட்ச காலி பணியிடங்களை கடந்த 5 ஆண்டுகளில் நிரப்பியது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெளிப்படையான கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் 7 கட்டங்களாகவும் 2022 ஆம் ஆண்டில் 5 கட்டங்களாகவும் ரயில்வே உள்ள காலி பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடைபெற்றன. இதன் மூலம், 2023 ஆம் ஆண்டில் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 2,94,115 காலிப் பணியிடங்கள் நிரப்ப பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதில், பெரும்பாலானோர் (90%) ரயில்வே பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
தமிழகத்தில் பால் உற்பத்தியாளர் கொள்முதல் விலை உயர்வு., ஆவின் பால் உயருமா? வெளியான முக்கிய தகவல்!!!