இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக் பிரிவின் ஆரோக்ய சேது ஆப் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றி வருகிறது. அந்த வகையில் புதிய சாதனைகளையும் அது படைத்து உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதனால் பிரதமர் மோடி அவர்கள் அறிவித்த 21 நாள் ஊரடங்கு உத்தரவை பல மாநிலங்கள் ஏப்ரல் 30 வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்தன. இந்நிலையில் நாட்டு மக்களுக்கு ஏப்ரல் 14ம் தேதி உரையாற்றிய பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை மே 3 வரை இன்னும் 19 நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் பல்வேறு அறிவுரைகளும் வழங்கினார்.
ஆரோக்ய சேது ஆப்:
அந்த வகையில் மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பின் ஆரோக்ய சேது மொபைல் அப்ளிகேஷனை அனைவரும் டவுன்லோட் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். பொதுமக்களும் பிரதமரின் கோரிக்கையை ஏற்று செயலியை பதிவிறக்கம் செய்தனர். அந்த செயலியின் மூலம் நாம் இருக்கும் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா என காட்டும். மேலும் நாம் கொரோனா தொற்று உள்ளவரிடமிருந்து 6 அடி தூரத்திற்குள் இருந்தால் அதிக ஆபத்து என எச்சரிக்கும்.
அதிக டவுன்லோட்கள்:
நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள தகவல்களின் படி 50 மில்லியன் பயனாளர்களை சென்றடைய டெலிபோனுக்கு 75 ஆண்டுகள், ரெடியோ 38 ஆண்டுகள், டி.வி.,க்கு 13 ஆண்டுகள், இணையத்திற்கு 4 ஆண்டுகள், பேஸ்புக்கிற்கு 19 மாதங்கள், போக்கிமான் கோ 19 நாட்கள். ஆனால், ஆரோக்கிய சேது செயலி 13 நாட்களிலேயே 50 மில்லியன் பயனாளர்களை எட்டி உள்ளது என தெரிவித்து உள்ளார். இந்த ஆப் தற்போது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மட்டுமே பயன்படும் வகையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |