கொடி பறக்குதா..! டில்லியை மீண்டும் கைப்பற்றியது ஆம் ஆத்மி..!

0

டெல்லி சட்டமன்ற தேர்தல் ஒட்டு எண்ணிக்கை இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை நடந்த ஓட்டுப்பதிவில் 62.59 வாக்குகள் பதிவானது. இன்று காலை முதலே அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து பல தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

ஆம் ஆத்மி 37, பாஜக 4..!

மொத்தமுள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 43 தொகுதிகளில் வெற்றி வாகை சூடியது. மேலும் மீதமுள்ள தொகுதிகளில் 20ல் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. மொத்த கணக்கெடுப்பு முடிவில் டில்லியில் ஆம் ஆத்மி கட்சி வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெறப்போகிறது என்பது நிரூபணமாகி விட்டது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

பாஜக.,வினைப் பொறுத்தவரை 4 தொகுதிகளில் வெற்றியும் 3 தொகுதிகளில் முன்னிலையும் வகுத்து வருகிறது. 70 தொகுதிகளில் 36ல் வெற்றி பெற்றாலே ஆட்சி அமைக்கலாம் என்று உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி 43ஐ ஏற்கனவே கைப்பற்றிய நிலையில் அங்கு மீண்டும் அந்த கட்சியின் ஆட்சி உறுதி ஆகி விட்டது.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

காங்கிரஸ் மற்றும் BSP போன்ற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட முன்னிலையோ, வெற்றியோ பெறவில்லை.

முக ஸ்டாலின், பிரஷாந்த் கிஷோர் வாழ்த்து..!

டெல்லியில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சிக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் அரசியல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

ஜெகன் மோகனை வெற்றிபெறச் செய்த கையோடு ஸ்டாலினுடன் கைகோர்த்த பிரஷாந்த் கிஷோர் – கார்ப்பரேட் மான்ஸ்டர் பிரஷாந்த்..!

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here