விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் விவாத நிகழ்ச்சியில் ஒன்று நீயா நானா. கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில், இந்த வாரம் நவீன கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்து விட்டு அதிலிருந்து வெளியே வந்து சிறு குறு வியாபாரம் மற்றும் விவசாயம் செய்பவர்களும் ஒரு பக்கம், இவர்கள் எடுத்த முடிவு தவறு இப்படி நிறுவனங்களில் இருந்துவெளியே வந்திருக்கக் கூடாது என்று அதை மறுப்பவர்கள் ஒரு பக்கமும் அமர்ந்து விவாதம் செய்கின்றனர்.
அப்பொழுது ஒரு பெண் நானும் என்னுடைய ஹஸ்பண்டும் IT யில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போ மாசம் பத்து லட்சத்துக்கு மேல சம்பளம் வாங்கிக்கிட்டு இருந்தோம் என்று சொல்ல, அப்போது கோபிநாத் ஒரு மாசத்துக்கு 10 லட்சம் என்றால் வருஷத்துக்கு அஞ்சு ஆறு கோடி ரூபாயாவது வந்திருக்குமே என்று கேட்க அதற்கு அந்தப் பெண் நம்பர் சொல்ல விரும்பல என்று கூறி தனது விவாதத்தை முடித்தார். தற்போது இது குறித்து இணையத்தில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழகத்தில் வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு புதிய நடைமுறை., அரசாணையை வெளியீடு!!!