இந்தியாவில் மேலும் 2,17,353 பேருக்கு கொரோனா – 1,185 பேர் பலி!!

0

இந்தியாவில் தற்போது இரண்டாவது நாளாக ஒரே நாளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. அதேபோல் இறப்பு எண்ணிக்கையும் ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா நோய்த்தொற்று:

உலக அளவில் கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தற்போது நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது இந்தியாவில் 2வது நாளாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 2,17,353 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனவால் பாதிக்கப்பட்டு 1,185 பேர் உயிரை இழந்துள்ளனர். இதன் மூலம் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,74,308 ஆக அதிகரித்துள்ளது.

‘கொரோனா பரவலை தடுக்க கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்’ – மத்திய அரசிற்கு கடிதம் எழுதிய தமிழக அரசு!!

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1,18,302 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் தற்போது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,25,47,866 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனையில் 15,69,743 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here