தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையை தடுப்பதற்கு தடுப்பூசி பணிகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் சுமார் 8 ஆயிரம் வரை கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தில் பல்வேறு கட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் சுகாதாரத்துறையினரும் தொடர்ந்து மக்களை மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தற்போது தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல் தகுதி உடையவர்கள் அனைவரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள சுகாதாரத்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். தற்போதைய நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வந்தால் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தும் கடுமையாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பு?? தலைமை செயலாளர் ஆலோசனை!!
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. கடிதத்தில் எழுதி இருந்ததாவது, தமிழகத்திற்கு கூடுதலாக 15 லட்ச கோவிஷீல்டு தடுப்பூசிகள் மற்றும் 5 லட்ச கோவாக்சின் தடுப்பூசிகள் என மொத்தம் 20 லட்ச தடுப்பூசிகள் கூடுதலாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.