இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மும்பை மைதானத்தில் நடைபெறுகிறது.
சென்னை vs பஞ்சாப்:
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே சென்னை அணி தனது முதல் போட்டியில் டெல்லி அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது. கடந்த தொடரில் சென்னை அணி தனது மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரையும் ஏமாற்றியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் இந்த தொடரில் சென்னை அணி தனது வழக்கமான அதிரடி காட்டும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் சென்னை அணி இந்த முறை ஏலத்தில் பல வீரர்களை விடுவித்து பல முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. கடந்த போட்டியில் சென்னை அணியின் பந்துவீச்சு சற்று சுமாராகவே இருந்தது. . இந்நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணி அதில் அதிக கவனம் செலுத்தினால் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கூறுப்படுகிறது.
இனி என்னை பேட்டிங்கிற்கு அனுப்பாதீங்க – கதறும் மும்பை இந்தியன்ஸ் வீரர்!!
அதேபோல் தனது முதல் போட்டியிலே மிக பெரிய இமாலய ஸ்கோரை பதிவு செய்து தனது முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியுள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் அனைத்து வீரர்களும் செம பார்மில் உள்ளனர். எனவே கடந்த போட்டியை போல் இதிலும் அதிக கவனம் செலுத்தினால் கண்டிப்பாக சென்னை அணிக்கு அதிக நெருக்கடி கொடுக்க முடியும்.
இந்நிலையில் இந்த இரு அணிகளும் இதுவரை மொத்தம் 23 முறை மோதியுள்ளனர். அதில் அதிகபட்சமாக சென்னை 14 முறையும் பஞ்சாப் அணி 9 முறையும் தனது வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் வெற்றிக்கு சென்னை அணியும், தொடர் வெற்றிக்கு பஞ்சாப் அணியும் மோதவுள்ளதால் இந்த போட்டி அனைவரிடமும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.