தன் பிறந்தநாளில் சக்தியிடம் காதலை சொல்ல முடிவெடுக்கும் தருண் – ஸ்ருதியின் நிலை என்ன??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீரியலில் தருண் தனது பிறந்த நாள் அன்று சக்தியிடம் தனது காதலை சொல்லி விடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சக்தியும், மல்லிகாவும் கடைக்கு சென்று வீட்டிற்கு வர அப்பொழுது தருணும், அவரது அப்பாவும் பேசிகொண்டுள்ளனர். தருணின் அப்பாவும் மல்லிகாவையும், சக்தியையும் அழைத்து விசாரிக்கிறார்.

அடுத்து வருணும் தருணம் பேசிகொண்டுள்ளனர். சக்தி இல்லாமல் தன்னால் இருக்க முடியவில்லை என்று வருணிடம் கூறுகிறார். தன் பிறந்த நாள் அன்று சக்தியிடம் காதலை சொல்ல போவதாக வருணிடம் கூறுகிறார். இதனால் வருணும் சந்தோஷமாகிறார்.

அடுத்து ஸ்ருதி தருணுக்கு தனது காதலை சொல்வதற்காக பாலா கிஃப்ட் வாங்கி வைக்கிறார். தனது காதலை எப்படி சொல்வது என்றும் ஒத்திகை பார்க்கிறார். ஸ்ருதியின் பாட்டியும் தான் கவிதை எழுதி தருவதாகவும் சொல்கிறார். அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் சொல்லி விடுகிறார்.

சந்தியாவை வெளியே அழைத்து சென்று கிஃப்ட் கொடுக்கும் சரவணன் – கடுப்பாகும் பார்வதி!!

மேலும் இன்று தருணின் பிறந்த நாள் என்பதால் வீட்டில் உள்ள அனைவரிடமும் ஆசிர்வாதம் வாங்குகிறார். அடுத்து ஸ்ருதி கிராண்ட்டாக கிளம்பி செல்கிறார். அடுத்து வருண் அவரின் அப்பா உடன் ஸ்கூலுக்கு செல்கிறார். அப்பொழுது ஸ்கூலின் மீது போடப்பட்ட கேஸ் பற்றி சொல்ல கார்த்திக் கோவமடைகிறார்.

அந்த நோட்டீஸை எரிக்கிறார். நெருப்பை பார்த்ததும் வருணுக்கு என்னவோ போல ஆகிறது. அம்மாவை காப்பாத்துங்க என்று கத்துகிறார். இதனை பார்த்த கார்த்திக் வருணுக்கு என்ன ஆச்சு என்று ஷாக்காகிறார். அடுத்து வருணை காரில் வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here