பாக்கியலட்சுமி சீரியல் நடிகை மேக்கப் போடாமல் செய்த காரியத்தை பாருங்களே – வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை மேக்கப் போடமால் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி ரித்திகா

சின்னத்திரை நடிகையான ரித்திகா ராஜா ராணி சீரியல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன் பிறகு சன் டிவியிலும் சில சீரியல்களில் நடித்திருந்தார். ஆனாலும் அவருக்கு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. பாக்கியலட்சுமி சீரியலில் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

எழிலுக்கு ஜோடியாக இருக்க மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த கியூட்டான முகமும், சிரிப்பும் மக்கள் மனதை கொள்ளை கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு குக் வித் கோமாளியில் வைல்ட் கார்டில் என்ட்ரி கொடுத்தார். சிலர் இதனை ஏற்றுக்கொண்டாலும் பலரும் எதிர்ப்பு தான் தெரிவித்தனர்.

சந்தியாவை வெளியே அழைத்து சென்று கிஃப்ட் கொடுக்கும் சரவணன் – கடுப்பாகும் பார்வதி!!

ஆரம்பத்தில் நன்றாக சமைத்தாலும் 2வது எபிசோடில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆனார். அதன் பிறகு ஒரு லைவ்வில் கூட தனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் பெருமை படுவதாகவும் சொல்லியே இருந்தார். ஷிவாங்கி தான் எனக்கு பிடித்த பெண் என்றும் கூறியிருந்தார்.

புதிதாக வந்த ரித்திகாவையுமே புகழ் வம்பிழுக்க தான் செய்தார். இந்நிலையில் தொடர்ந்து தனது புகைப்படங்களை ரித்திகா வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் ஒரு சேலன்சாக மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேக்கப் இல்லாமலும் இயற்கை அழகில் மின்னும் ரித்திகாவை பார்த்த பலரும் கிறங்கி தான் போயுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைராகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here