பெண்களுக்கு தங்கள் முகம் மிருதுவாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவர். அந்த வகையில் அதற்கு வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து மிருதுவான முக அழகினை பெற என்ன செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
மிருதுவான முக அழகு
ஒரு பெண்ணிற்கு அழகு என்றால் அது முக அழகு தான். அதற்காக பெண்கள் மிகவும் மெனக்கிடுவர். இதற்காக பணமும் அதிகமாக செலவழிப்பர். பார்லர் சென்று அழகினை மெருகேற்ற வேண்டும் என்றும் நினைப்பர். ரசாயனம் கலந்த பொருட்களை முகத்தில் பயன்படுத்தினால் அது நல்ல பலன்களை ஆரம்பத்தில் வழங்க தான் செய்யும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனால், காலப்போக்கில் அது பக்க விளைவுகளையும், முகத்தில் சுருக்கங்களையும் ஏற்படுத்தி விடும். இதற்கு நல்ல தீர்வு என்றால் அது இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தி முக அழகினை பராமரிப்பது தான்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
- கஸ்தூரி மஞ்சள் – 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
மேற்குறிய அனைத்து பொருட்களையும் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கிண்டி கொள்ளவும். பின், இதனை முகத்தில் அப்ளை செய்ய வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த நீர் கொண்டு கழுவி விட வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முக மிருதுவாக மாறி விடும்.