இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நான் ஒன்றும் அரசு நிதியில் ஹெலிகாப்டரில் போகவில்லை என்று கடுமையாக கூறியுள்ளார்.
கமல்ஹாசன்:
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் புதுவராவாக உலக நாயகன் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் கட்சியை துவக்கி கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுகிறார். மேலும் இந்த தேர்தலில் இவர் தான் முதல்வர் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கமல் தனது தேர்தல் பணிகளில் மிக ஆயத்தமாக இறங்கியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தனது பிரச்சார வேலைகளிலும் மிக மும்மரமாக இறங்கி வருகிறார். இவர் தனது பிரச்சாரத்திற்காக சில பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்று வருவார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு சில மாவட்டங்களில் இவரது ஹெலிகாப்டரை நிறுத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதியளிக்கவில்லை. இதனால் பல சர்ச்சைகள் கிளம்பியது. தற்போது இதுகுறித்து கமல்ஹாசன் பேட்டியளித்துள்ளார்.
கிரிக்கெட் வீரர் பாப் வுல்மரின் மர்மமான மரணம் – இன்று நினைவு தினம்!!
அதில் அவர் கூறியதாவது, நான் ஒன்றும் அரசு காசில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை. என்னை ஹெலிகாப்டரில் செல்ல வைத்ததே மக்கள் தான். மேலும் இதுபோன்ற அரசியல் செலவிற்காக தான் நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை செய்கிறேன். தற்போது ஹெலிகாப்டர் இலேயென்றாலும் நான் மக்களை சந்தித்து தான் வருவேன் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.