கதிரை தொடர்ந்து இழிவாக பேசும் மீனா – கோவத்தில் கொந்தளிக்கும் முல்லை! ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் நிலை??

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது குடவுன் இடத்தை வளைத்து போட நினைத்த ஜனார்த்தனன் திட்டம் நிறைவேறாததை நினைத்து கோவமடைகிறார். மேலும் மீனா தொடர்ந்து கதிரை கேவலமாக பேச குடும்பத்திற்குள் பிரச்சனையாகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

நேற்றைய எபிசோடில் பாக்கியா குடும்பம் எல்லா நிகழ்ச்சிகளையும் முடித்து விட்டு வெளியேறியது. இன்றைய எபிசோடில் ஜனார்த்தனன் அந்த இடத்தை தன்னால் வாங்க முடியவில்லை என்ற விரக்தியில் உள்ளார் ஜனார்த்தனன். தொடர்ந்து மூர்த்தியிடம் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் என்று கத்துகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இனி அந்த அண்ணன் தம்பிகளை பிரிக்கவே முடியாது என்று ஆத்திரமடைகிறார். வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் சமாதானம் செய்ய ஜனார்த்தனன் கத்துவதை நிறுத்துவதாக இல்லை. வீட்டிற்கு வந்த புரோக்கர் இன்னும் அந்த இடம் அவர்களின் கைக்கு போகவில்லை.

3 மாதம் கழித்து தான் வாங்குவார்கள். அதற்குள் நாம் எதாவது செய்யலாம் என்று சொன்னதும் தான் அமைதியாகிறார். அடுத்ததாக மூர்த்தி வீட்டில் புதிதாக வாஷிங் மெஷின் வாங்குகின்றனர். எப்படி அதை யூஸ் செய்வது? என மீனா சொல்லிக்கொடுக்க தனமும், முல்லையும் துணியை எடுத்துக்கொண்டு வருகின்றனர்.

கதிர் துணி மிகவும் அழுக்காக இருபாதகவும், அதனை இந்த துணியுடன் போட வேண்டாம் என்றும் கூறுகிறார். இதனால் கோவமடையும் முல்லை, மீனாவிடம் சண்டை போடுகிறார். எனக்கு இனி இந்த வாஷிங் மெஷின் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் காலமானார் – தலைவர்கள் இரங்கல்!!

தனமும் ஏன் இப்படி பேசுற என்று மீனாவை கேட்க உண்மையை தானே சொன்னேன் என்று சொல்லிவிட்டு செல்கிறார். அதன் பின் அனைவரும் ஹாலில் உட்கார்ந்திருக்க வீட்டிற்கு சென்செக்ஸ் எடுக்க வருகின்றனர். வீட்டில் உள்ளவர்களிடம் பேர், வயது என அனைத்தையும் கேட்கின்றனர்.

ஜீவாவும், கதிரும் என்ன படித்திருக்கிறார்கள் என்று கேட்க மீனா முந்திக்கொண்டு ஜீவா டிகிரி முடித்திருப்பதாகவும் கதிர் வெறும் 10th தான் என்றும் கூறுகிறார். 10th பாஸ் செய்தாரா? என்று கேட்க ஃபெயில் தான் சொல்கிறார். இதனால் கடுப்பான முல்லை மீனாவை, தேவையில்லாமல் பேசுற வேல வச்சுக்காதீங்க என்று சொல்கிறார்.

தனமும் அவன் குடும்ப கஷ்டத்துக்காக தான் படிக்க போகலை என்று சொல்ல அதற்கு மீனா அப்போ ஜீவா இந்த வீட்டுக்கு ஒன்னுமே செய்யலன்னு சொல்ல வரீங்க என்று சண்டையிடுகிறார். தொடர்ந்து கதிரை கேவலமாகவே பேசிக்கொண்டுள்ளார் மீனா. ஒரு கட்டத்தில் தனம் கதிர் தான் இந்த குடும்பத்துக்கு எல்லாமே செஞ்சான் என்று கத்த அதனை ஜீவா கேட்டு விடுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here