தமிழகத்தில் 9ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றியே தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து நாளை முதல் இந்த வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் பள்ளிகளுக்கு வர தேவையில்லை என்ற அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழக பள்ளிகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வந்தன. தீவிர நடவடிக்கைகளுக்கு பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டன. ஜனவரி 19ம் தேதி முதல்10ம் மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பிக்க பட்ட நிலையில் 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் வகுப்புகள் துவங்கப்பட்டன.
தமிழகத்தில் 9,10 மற்றும் 11 வகுப்பு மாணவர்கள் “ஆல்பாஸ்” – முதல்வர் அதிரடி அறிவிப்பு!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்நிலையில் 9 முதல் 11 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெறுவதாக இன்று தமிழக முதல்வர் பழனிசாமி இன்று சட்டபேரவையில் அறிவித்தார். இதை தொடர்ந்து “இந்த வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை முதல் இவர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனவும், அடுத்த கல்வியாண்டின் துவக்கமான ஜூன் மாதத்தில் இம்மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்தால் போதும்” எனவும் தற்போது அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.