போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் – தொழிற்சங்கம் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் ஊதிய உயர்வு போன்ற கோரிக்கையை முன்னிறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த போராட்டம் குறித்து தொழிற்சங்க தலைவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள்:

தமிழகத்தில் இன்று முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து பல நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதனை தமிழக அரசு கவனிக்கவில்லை. இதன் காரணமாக தமிழக அரசை கண்டித்து போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போராட்டத்தில் 9 தொழிற்சங்க கூட்டங்கள் கலந்து கொண்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பேருந்துகள் இயங்காத காரணத்தினால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது இதுகுறித்து சென்னையில் தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்பு சிஐடியூ சவுந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு – முதல்வர் அதிரடி!!

அப்போது அவர் கூறியதாவது, ரூ.1,000 ஊதிய உயர்வு தொடர்பாக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான உத்தரவு எதுவும் இதுவரை வரவில்லை என்று குற்றம் சாட்டினார். மேலும் அமைச்சர் அறிவித்த ரூ.1,000 இடைக்கால நிவாரணம் எந்த வகையிலும் போதுமானது அல்ல. மேலும் அவர்கள் கடந்த முறையே ரூ.3,000க்கு மேல் ஊதிய உயர்வை பெற்றுள்ளதை சுட்டிக்காட்டினார். தற்போது வரை அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காத காரணத்தினால் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here