இந்தியாவில் வைத்து நடந்துகொண்டிருக்கும் விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் மும்பை அணியின் பிரித்வி ஷா இரட்டை சதமும் சூரியகுமார் யாதவ் சதமும் அடித்துள்ளனர்.
மும்பை vs புதுச்சேரி:
இந்தியாவில் தற்போது உள்ளூர் போட்டிகளை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே சையது முஷ்டாக் அலி கோப்பை முடிந்த நிலையில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் மும்பை மற்றும் புதுச்சேரி அணிகள் மோதின. டாஸ் வென்ற புதுச்சேரி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் மும்பை அணி மிக சிறப்பாக விளையாடியது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
துவக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். மேலும் இவரை போல் சூரியகுமார் யாதவும் தொடர்ந்து அதிரடி காட்டி வந்தார். இவர்களது ஆட்டத்தினால் மும்பை அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் சதம் கடந்து 133 ரன்கள் எடுத்த நிலையால் ஆட்டமிழந்தார்.
விஜயுடன் மீண்டும் இணையும் பிரபலம் – தளபதி 65 அப்டேட்!!
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட ப்ரித்வி ஷா இரட்டை சதத்தை பதிவு செய்து அசத்தினார். இவரது இரட்டை சதத்தில் 31 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர் அடங்கும். தற்போது இவர்களின் இந்த ஆட்டத்தினால் மும்பை அணி 50 ஓவர் முடிவில் 457 ரன்களை குவித்தது. தற்போது இந்த இரு வீரர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி 20 தொடரில் சூரியகுமார் இடம்பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.