தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்களுக்கு தற்போது தேர்தல் ஆணையத்தின் மூலமாக விருப்ப மனுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேமுதிக விருப்பமனு:
தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக மற்றும் திமுகவை தொடர்ந்து இன்று விருப்ப மனுக்களை பெற்ற தேமுதிக வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளுக்காக மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
டிடிவி தினகரனை முதல்வராக்க வேண்டும் – அமமுக பொதுக்கூட்டத்தில் தீர்மானம்!!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விருகம்பாக்கத்தில் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகிய நிலையில் அவரது மனைவியும் கட்சியின் பொருளாளருமான பிரேமலதா விருதாச்சலதத்தில் போட்டியிடுவதற்காக விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தேமுதிக வேட்பாளர்கள் தொடர்ந்து தங்களது தொகுதிகளுக்கு மனு தாக்கல் செய்து வரும் நிலையில் விஜகாந்தின் மகன் விஜய பிரபாகரன் அம்பத்தூரில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.