‘பாரதி வீட்டுல லட்சுமிக்கு எல்லாத்தையும் கிடைக்க வைப்பேன்’ – கண்ணம்மா எடுக்கும் அதிரடி முடிவு??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் சௌந்தர்யா வீட்டில் இருக்கும் கண்ணம்மா வேலை முடிந்து கிளம்பி செல்ல அனுப்ப மனமில்லாமல் கண்கலங்குகிறார் சௌந்தர்யா. தொடர்ந்து லட்சுமியை சமாதானம் செய்ய ஹவுஸ் ஓனர் சுமதி வீட்டிற்கு வருகிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தொடர்ந்து பாரதி வீட்டில் சமைத்துக் கொண்டிருக்கும் கண்ணம்மா வீட்டிற்கு எப்படியாவது சென்று விட வேண்டும் என்று வேகமாக வேலை செய்கிறார். எல்லா வேலையும் முடிந்ததும் வீட்டிற்கு கிளம்ப தயாராகிறார் கண்ணம்மா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சௌந்தர்யா அவருக்கு புடவையை தர அதனை வாங்க மறுக்கிறார். ஹேமா வற்புறுத்தலால் அந்த புடவையை வாங்கி கொள்கிறார். சௌந்தர்யா புடவைக்குள் காசை ஒளித்து வைக்கிறார். இது தெரியாமல் வாங்கிக் கொள்கிறார். மேலும் கண்ணம்மாவை அம்மா என்று ஹேமாவை அழைக்க சொல்கிறார்.

அதன் பின் கண்ணம்மாவையும், சௌந்தர்யாவையும் இங்கேயே இருக்க சொல்கிறார். ஹேமாவை குழந்தை போல பார்த்துக் கொண்டால் நான் உன்னை பாத்துக்கிறேன் என்று சொல்கிறார். பாரதியும், வெண்பாவும் சிரித்து பேசும் சத்தம் கேட்க கோவமடையும் கண்ணம்மா எந்த உரிமைல என்ன தங்க சொல்றிங்க.

தமிழக போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம் – பொதுமக்கள் அவதி!!

அதான் உங்களுக்கு புது மருமகள் வந்துட்டாள் தானே. அப்பறம் நான் எதுக்கு என்று மனதில் நினைத்துக் கொள்கிறார். கண்ணம்மா வீட்டை விட்டு கிளம்ப அஞ்சலியின் வளைகாப்புக்கு கண்டிப்பாக வர வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் கண்ணம்மா தன்னால் முடியாது என்று கூறி விடுகிறார்.

அடுத்ததாக கண்ணம்மா கிளம்பி போக சௌந்தர்யா கண்கலங்குகிறார். போகும்போது லட்சுமிக்கு கண்ணம்மா செய்த ஸ்வீட்களை எடுத்து கொடுக்கிறார். வேற வழி இல்லாமல் கண்ணம்மாவும் அதனை வாங்கிக் கொள்கிறார். மேலும் அடுத்ததாக வேணுவும், சௌந்தர்யாவும் பேசிக்கொண்டுள்ளனர்.

அப்பொழுது கண்ணம்மாவிற்கு ஹேமா பற்றி எந்த சந்தேகமும் வரவில்லையா?? நம்மள தாத்தா, பாட்டினு கூப்டுறா அப்பறம் அகிலனை சித்தி, சித்தப்பானு கூப்டுறா எந்த சந்தேகமும் அவளுக்கு வரலையா?? என்று கேட்க அப்பொழுது தான் சௌந்தர்யாவிற்கும் தோன்றுகிறது.

அடுத்ததாக லட்சுமியை காட்டுகின்றனர். சுமதி அவருக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு வர வீட்டில் நடந்தவற்றை தவறாக எடுத்துக்கொண்டாயா?? என கேட்கிறார். மேலும் இதனை கண்ணம்மாவிடம் சொல்ல வேண்டாம் என்றும் கூறுகிறார். அப்பொழுது வீட்டிற்கு வருகிறார் கண்ணம்மா.

பாரதி வீட்டில் கொடுத்த ஸ்வீட்டை தருகிறார். அதன் பின் லட்சுமி எப்படி வாழ வேண்டிய பெண். அனால் இப்படி கஷ்டப்படுகிறாள். எப்படியாவது உனக்கு சேர வேண்டியதை வாங்கியே தீருவேன் என்று நினைத்து கொள்கிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here