நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் பல நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் அவரது ரசிகர்கள் அவர் அரசியல் அல்லது தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்
தமிழ் திரையுலகின் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக கருதப்படுபவர் தான், நடிகர் ரஜினிகாந்த். இவர் கடந்த பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்து வந்தார். பல வருடங்கள் அவர் இதையே கூறி வந்ததால் அவர் அரசியலுக்கு வர மாட்டார் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர். இப்படியாக இருக்க இந்த ஆண்டு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து தீவிரமான பணிகளிலும் அனைத்து கட்சிகளும் இறங்கி வருகின்றனர்.
கமல் நடிக்கும் ‘பாபநாசம் 2’ திரைப்படம் – ஜோதிகா அல்லது மீனாவை நடிக்க வைக்க பரிசீலனை!!
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் அரசியல் குறித்த வசனங்களையும் பேசி வந்தார். அதே போல் தனது பிறந்தநாளைக்கு சில நாட்கள் இருக்கையில் தான் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் பங்கு கொள்ள இருப்பதாக தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருந்தனர். இதனை அடுத்து அவர் அடுத்து வந்த சில நாட்களில் பரவலாக பேசப்பட்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின், திடீர் என்று ஒரு நாள் தனது உடல் நிலையினை காரணம் காட்டி தன்னால் இந்த தேர்தலில் போட்டியிட முடியாது என்று அதிரடியாக தெரிவித்தார். இதனால் அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்தனர். இது இப்படியாக இருக்க பல மாதங்களுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த நாளை மறுநாள் செய்தியாளர்களை நிருபர்களை சந்திக்க இருக்கின்றார். இது தற்போது உள்ள அரசியல் சூழலில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று கூறினாலும் அவர் எதாவது ஒரு கட்சிக்கு தனது ஆதரவினை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.