தெலுங்கனாவில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மக்கள் ஹிந்தி நடிகர் சோனு சூட்டிற்கு அவரது உருவ சிலையை வைத்து கோவில் ஒன்றை கட்டி உள்ளனர். திரைப்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகையருக்கு கோவில் கட்டும் அதிசயம் எல்லாம் இந்தியாவில் மட்டும் தான் நடக்கும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இது ஒன்றும் முதல் முறை அல்ல, இதற்க்கு முன்பே பல நடிகர், நடிகையருக்கு கோவில் கட்டும் வினோதம் இந்தியாவில் நடந்து உள்ளது. ஆனால் இம்முறை ஊரடங்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது சொத்தை அடமானம் வைத்து உதவிய நடிகர் சோனு சூட்டிற்கு கோவில் கட்டி அசத்தியுள்ளனர் ஒரு கிராம மக்கள்.
அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சித்திப்பேட் மாவட்டத்தை சேர்ந்த டப்பா கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் நடிகர் சோனோ சூட் க்கு கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் பிறப்பித்த ஊரடங்கால் மக்கள் அனைவரும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பசி, பட்டினியால் வாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது பலரும் தாங்களாக முன் வந்து வறுமையில் வாடும் மக்களுக்கு உதவிகளை செய்து கொண்டிருந்தனர்.
பிரபல தமிழ் விளையாட்டு வர்ணனையாளர் ஜப்பார் மரணம்!!
இந்த குறிப்பிட்ட கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு ஊரடங்கு காலத்தின் போது நடிகர் சோனு சூட் உதவி தேவைப்பட்ட அனைவருக்கும் பல உதவிகயும் செய்துள்ளார். மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், பசியால் வாடியவர்கள் என்று பலருக்கும் உதவிகளை செய்துள்ளார். இவரது இந்த முயற்சியினால் சமூக வலைத்தளங்களிலும் அவர் பலரின் பாராட்டுக்களை பெற்றுள்ளார்.
இவர் செய்த இந்த சமூகப்பணியை மக்கள் எப்பொழுதும் நினைவு கூறும் வகையில் சோனு சூட்டின் உருவ சிலை வைத்து பிரதிஷ்டை செய்து கோவில் ஒன்றை கட்டியுள்ளனர். மேலும் அவரது சிலையை செய்த சிற்பியின் கையாலேயே இந்த கோவிலை திறந்துள்ளனர். இது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.