“நான் எந்த பாலியல் தொழிலும் செய்யவில்லை” – வீடியோ வெளியிட்ட ரவுடி பேபி சூர்யா!!

0

திருச்சியில் உள்ள ஸ்பாகளில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்த தகவலையடுத்து 10 பெண்கள் கைது செய்யப்பட்ட வழக்கில் ரவுடி பேபி சூர்யாவும் ஒருவர். அவர் தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை என வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா

திருச்சியில் மாநகரில் மசாஜ் மையங்கள் எனும் ஸ்பா சென்டர்களில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல்கள் வந்தன. இந்த தகவலையடுத்து நடத்தப்பட்ட போலீசாரின் தொடர் சோதனையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உறையூர் பகுதியில் நடைபெற்ற சோதனையில் கைது செய்யப்பட்ட நபர்களில் டிக்டாக்யில் பிரபலமான ரவுடி பேபி சூர்யாவும் புரோக்கர் தினேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்க்காக கொரோனா பரிசோதனை செய்யபட்டது. கொரோனா பரிசோதனை செய்து முடிவுகள் வந்த நிலையில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், அவர்கள் பிணை மூலம் விடுவிக்கப்பட்டனர். மீட்கப்பட்ட 12 பெண்கள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கர்ப்பமான உண்மையை மூர்த்தியிடம் கூறிய தனம்!!

டிக் டாக் சூரியா தான் பாலியல் தொழிலில் ஈடுபடவில்லை எனவும், சோதனை நடைபெற்ற ஸ்பாவில் நான் இருந்தேன், ஆனால் அந்த ஸ்பா என்னுடைய நண்பருடையது, அவரை பார்த்து பணம் வாங்க சென்றேன், அங்கு எந்த தவறும் நான் செய்யவில்லை என்றும், போலீஸ் கஸ்டடியில் கொரோனா பரிசோதனைக்காக 6 மணி நேரம் இருந்தேன் எனவும் இந்த பாலியல் வழக்கு சம்மந்தமாக விளக்கமளித்து வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here