கர்ப்பமான உண்மையை மூர்த்தியிடம் கூறிய தனம் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள் செம ஹாப்பி!!

0

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மூர்த்தி மற்றும் தனம் இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர். தனம் தான் கர்ப்பமான விஷயத்தை அவரிடம் பகிர்ந்து கொள்கின்றார். இதனை அடுத்து ஜனார்த்தனன் மீனாவையும் குழந்தையும் மூர்த்தி வீட்டிற்கு அனுப்ப மறுக்கின்றார்.

“சந்தோச செய்தி”:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது தான் சுவாரஸ்ய திருப்பம் வந்துள்ளது. தனம் கர்ப்பமானதற்கான அறிகுறிகளை தனக்குள் காண்கிறார். அதனை உறுதி செய்ய டெஸ்ட் கிட் வாங்கி சோதனை செய்ததில் அவர் கர்ப்பமாகியுள்ளது தெரிய வருகிறது.

இதனை முதலில் மூர்த்தியிடம் தான் சொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஆனால், குடும்பத்தில் நடக்கும் அடுத்தடுத்த பிரச்சனைகள் காரணமாக அவரால் சொல்ல முடியாமல் போகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து இன்று மூர்த்தியை கோவிலுக்கு அழைத்து செல்கிறார். அங்கு மூர்த்தி தான் இத்தனை வருடங்களாக குழந்தை இல்லாத காரணத்தால் அவமானங்களையும், பாதிப்புகளையும் சந்தித்து வந்ததாக கூறுகிறார். அதே போல் மற்றவர்கள் தனத்தை குழந்தை இல்லை என்று குத்தி காட்டும் போது தான் மிகவும் வேதனை அடைந்ததாக கூறுகிறார்.

இதை எல்லாம் பொறுமையாக கேட்கும் தனம் அவரிடம் உண்மையினை போட்டு உடைக்கிறார். இதனை முதலில் நம்ப முடியாத மூர்த்தி மீண்டும் மீண்டும் உறுதி செய்ய கேட்கிறார்.

கோபத்தில் ஜனார்த்தனன்:

பின், இருவரும் தங்களது சந்தோசங்களை பகிர்ந்து கொள்கின்றனர். தங்களது பல நாள் கனவு நிறைவேறிவிட்டதை அடுத்து இருவரும் மிகவும் சந்தோசமாக இருக்கின்றனர். பின், தனம் தான் டாக்டரிடம் உறுதி செய்யவில்லை என்று கூறுகிறார். மூர்த்தி உடனடியாக டாக்டரிடம் செல்லலாம் என்று கூறி கடவுளை தரிசனம் செய்து விட்டு ஹாஸ்பிடல் விரைகின்றனர்.

தமிழகத்தில் 10 மடங்காக உயர்ந்த ‘நிமோனியா பரவல்’ – அதிர்ச்சி ரிப்போர்ட்!!

வீட்டில் அனைவரும் மீனாவை பற்றி பேசுகின்றனர். பாத்ரூம் கட்ட கான்ட்ராக்டர் வருகிறார். மூர்த்தி மற்றும் தனம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்கள் தடுமாறுகின்றனர். இதனையடுத்து கண்ணன் கதிரை அவரிடம் பேசுமாறு ஊக்குவிக்கிறார். மீனா வீட்டில் அவரது அப்பா மற்றும் அம்மா தனம் மற்றும் மூர்த்தி மேல் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். மீனாவிடம் இருவரை பற்றியும் அவதூறாக சொல்லி குழப்புகின்றனர். இதோடு இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here