இந்த வருடம் தொடர்ந்து பல இழப்புகளை சந்தித்து வந்துகொண்டுள்ளோம். அதிலும் குறிப்பாக திரையுலகை சேர்ந்த பலரின் மரணம் கதிகலங்கவே செய்தது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சித்ரா மரணம் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அவர் இறப்பதற்கு முன்பு 12 மணி வரை இன்ஸ்டாவில் ஆக்ட்டிவாக இருந்துள்ளார். அவர் பதிவிட்ட போஸ்ட்டுக்கு கூட 42 ஆயிரம் லைக்ஸ் வந்துள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா
சின்னத்திரை நடிகை விஜே சித்ரா பல சேனல்களில் பணிபுரிந்தவர். தனது விடா முயற்சியால் இந்த நிலைக்கு வந்துள்ளார். முல்லை என்ற கதாபாத்திரத்தால் நாம் அனைவரையும் அவர் பக்கம் இழுத்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலே இவருக்கு இவ்வளவு பெயரும் புகழும் பெற்று தந்தது. ஆரம்பத்தில் பல சேனலில் நடித்திருந்தாலும் அவருக்கு உடனே எந்த வாய்ப்பும் கிடைத்திடவில்லை.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேலும் தெலுங்கு படங்களிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். சிறு வயதில் இருந்தே தான் கேமரா முன்பு வர வேண்டும் என்ற லட்சியத்துடனேயே இருந்துள்ளார். தனி ஒரு ஆளாக தனது குடும்பத்திற்காக உழைத்து சொந்த வீடும் கட்டிக்கொடுத்துள்ளார் சித்ரா. இவர் சித்ரா என்ற பெயரை விட முல்லை பெயரில் தான் பிரபலமானார்.
முல்லைக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்களும் உண்டு. மேலும் இது நாள் வரை வீர மங்கையாகவே இருந்து வந்த சித்ரா இப்படி தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு
கோழை இல்லையே என்று பலரும் கூறி வருகின்றனர். நேற்று அந்த ஹோட்டலில் இவரும் வருங்கால கணவர் ஹேமந்த் அவர்களும் ஒன்றாக தங்கியுள்ளனர்.
மறைந்த நடிகர் சிரஞ்சீவியின் மனைவி, மகனுக்கு கொரோனா – திரையுலகினர் ஷாக்!!
குளிக்க சென்ற சித்ரா நீண்ட நேரம் ஆகியும் வெளியில் வராததால் ஹோட்டலில் உள்ளவரை அழைத்து கதவை திறந்துள்ளார். அப்பொழுது சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. இது ரசிகர்கள் அனைவரையும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது. இதற்கிடையில் அவர் நேற்றிரவு 12 மணி வரை இன்ஸ்டா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்துள்ளார்.
மேலும் தனது புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதற்கு 42 ஆயிரம் லைக்ஸ் வந்துள்ளது. இப்படி 12 மணி வரை சாதாரணமாக இருந்த சித்ராவிற்கு இப்படி தற்கொலை செய்யும் அளவிற்கு என்ன தான் நடந்தது என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அந்த ஹோட்டலில் இருந்த ஹேமந்த் உட்பட அனைவரையும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். போலீசாரின் விசாரணைக்கு பிறகு என்ன நடந்தது என்றே தெரியவரும்