நடிகர் அர்ஜுனின் உறவினரும், பிரபல கன்னட நடிகருமான மறைந்த சிரஞ்சீவி சர்ஜா அவர்களின் மனைவி, மகன் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்று:
பிரபல கன்னட நடிகர் சுந்தர் ராஜ், ‘வைதேகி காத்திருந்தாள்’ படத்தில் அறிமுகமான நடிகை பிரமிளா ஜோஷி தம்பதியினரின் ஒரே மகள் மேக்னா ராஜ்.கடந்த 2018-ம் ஆண்டு மேக்னா ராஜ், நடிகர் அர்ஜுனின் உறவினரான சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
மேக்னா ராஜ் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் சிரஞ்சீவி சர்ஜா மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இளம் நடிகரின் இந்த திடீர் மரணம் கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சிரஞ்சீவி சார்ஜாவின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவர்களுக்கு (22.10.20) அன்று ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தற்போது மேக்னா ராஜ், அவரது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை மேக்னாராஜ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி!!
இதுகுறித்து அவர் வெளியிட அறிவிப்பில், “ வணக்கம், நான் எனது மகன், தந்தை, தாய் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆகையால் கடந்த சில வாரங்களில் எங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சோதனை செய்து கொள்ளுங்கள். என்றும் மேலும் எனது ரசிகர்கள் இந்தச் செய்தியை கேட்டு பதட்டமடைய வேண்டாம். குழந்தையான ஜுனியர் சிரு நலமாக உள்ளான். நாங்கள் சிகிச்சை எடுத்து வருகிறோம். சிரு எங்களின் ஒவ்வொரு நொடியையும் ஆக்கிரமித்துள்ளான். நாங்கள் இதனை எதிர்கொண்டு வெற்றியடைவோம்” என்று பதிவிட்டுள்ளார்.