தமிழ் திரையுலக நடிகரான கவுதம் கார்த்திக் அதிகாலை சென்னையில் உள்ள டிடிகே சாலையில் சென்ற போது அவரிடம் மர்மநபர்கள் செல்போனை பறித்ததாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடிகர் கவுதம் கார்த்திக்:
தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக புகழ் பெற்ற நடிகர், கார்த்திக். தமிழ் திரையுலகில் 80’களில் மிகவும் பிரபலமான நடிகர். அவரது மகன் தான் கவுதம் கார்த்திக். தற்போது தமிழ் சினிமாவின் “சாக்லேட் பாய்” போல இருந்து வருகின்றார். 2013 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் “கடல்” படத்தில் அறிமுகமாகி அதன் பின் பல படங்களில் நடித்துள்ளார். அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக இருக்க அவர் சென்னையில் உள்ள டிடிகே சாலையில் அதிகாலை சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அவரிடம் உள்ள செல்போனை சில மர்மநபர்கள் பறித்துள்ளனர். அவரது செல்போன் திருடு போனதை அடுத்து தற்போது சென்னை மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர். சமீப நாட்களாக சென்னையில் இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.