ஹர்திக் பாண்ட்யா விளாசல் – 50 ஓவர்களில் இந்திய அணி 302 ரன்கள் குவிப்பு!!

0

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். அதன்படி களமிறங்கிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் (16), சுப்மன் கில் (33) ரன்களில் வெளியேறினர். விராட் கோஹ்லி 63 ரன்களில் அலெக்ஸ் கேரி கேட்ச்கில் பெவிலியன் திரும்பினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் (19), கேஎல் ராகுல் (5) நிலைக்கவில்லை. பின்னர் ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஜோடி ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தனர். 7 பவுண்டரி, 1 சிக்ஸர் என 92 ரன்கள் குவித்த பாண்ட்யா 92 ரன்கள் விளாசினார். மறுபுறம் ஜடேஜா 3 சிக்ஸர், 5 பவுண்டரி என 66 ரன்கள் அடித்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.

ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக அகர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாடாத காரணத்தால் புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்திய அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டு உள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here