மதுரையின் முன்னாள்அ.தி.மு.க எம்.எல்.ஏ தனது மகளுக்கு 2 கோடி மதிப்பில் சீர்வரிசை கொடுத்துள்ளார். இது மதுரை நகரையே வாய்ப்பிளக்க வைத்தது. தற்போது இச்செய்தி இணையதளத்தில் வைரலாகி வந்தது.
மதுரையில் பிரமாண்ட திருமணம்
கடந்த 4 ஆம் தேதி மதுரையில் உள்ள நாகமலை புதுக்கோட்டையில் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ ஆன தமிழரசின் மகள் கீர்த்திக்கும், கொடிமங்கலம் வி.பி.வைத்தியநாதனின் மகன் வெற்றிவேலுக்கும் பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்தது.
![](https://enewz.in/wp-content/uploads/2020/11/DOWRY-300x168.jpg)
அத்திருமணத்தில் தனது மகளுக்காக ஆடு முதல் கார் வரை சீர்வரிசை கொடுத்துள்ளார். அந்த சீர்வரிசையின் மதிப்பு மட்டுமே 2 கோடி இருக்கும் என்றும் தெரிகிறது. அந்த 2 கோடி மதிப்பிலான சீர்வரிசை மதுரை மக்களயே வாயடைக்க செய்தது.
சீர்வரிசை “ஆடு முதல் கார் வரை “
முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ தனது மகளுக்காக 2 கோடி மதிப்பிலான சீர்வரிசை கொடுத்துள்ளார். அவை தங்கத்தட்டு முதல் வீட்டு உபயோகப்பொருட்கள் வரை மண்டபத்தில் கடலைபோல் அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது. இவற்றுடன் மேலும் ஆடு,கார்,மோட்டார் பைக் மற்றும் ட்ராக்டர் என பல பொருள்களையும் வாங்கி கொடுத்துள்ளார்.
இவற்றின் மொத மதிப்பு 2 கோடி மதிப்பில் இருக்கும். திருமண விழாவிற்கு வந்தவர்கள் இதனை கண்டு ஆச்சரியம் மற்றும் அல்லாமல் வியப்புடனும் பார்த்தனர். இதன் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையதளத்தில் வெளியிட்டதால் தற்போது வைரலாகி வந்த நிலையில் யார் வீட்டு திருமணம்? என்ற கேள்வியும் எழுந்தது.