பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்., TNSTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலரும் சென்னையில் வேலை மற்றும் கல்வி நிமித்தமாக தங்கி வருகின்றனர். இவர்கள் பண்டிகை உள்ளிட்ட தொடர் விடுமுறை தினங்களில் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கமாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவிக்காமல் எளிதாக பயணம் மேற்கொள்ள சிறப்பு பேருந்துகளை TNSTC இயக்கி வருகிறது. அந்த வகையில் பக்ரீத் பண்டிகை தொடர்  விடுமுறையை முன்னிட்டு நாளை (ஜூன் 14) முதல் 16ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதன்படி சென்னை கோயம்பேட்டில் இருந்து நாளை (ஜூன் 14) 545 சிறப்பு பேருந்துகளும்,  ஜூன் 15ம் தேதி 595 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட இருப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here