பல்கலை மற்றும் கல்லூரிகளில் அரியர் மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது யுஜிசி மற்றும் AICTE விதிகளுக்கு புறம்பானது என சென்னை உயர்நீதிமன்றத்தில் AICTE தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரியர் தேர்ச்சி:
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இறுதிப்பருவம் தவிர்த்து பிற செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்களும் தேர்வெழுத கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்களுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தமிழக அரசின் இந்த உத்தரவினை எதிர்த்து அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி, ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதில் செப்.30ம் தேதிக்குள் விளக்கம் அளிக்குமாறு யுஜிசி, AICTE மற்றும் தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இந்நிலையில் இன்று AICTE சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்பது யுஜிசி மற்றும் AICTE விதிகளுக்கு புறம்பானது. கல்லூரி இறுதிபருவ மாணவர்களுக்கு அரியர் தேர்வுகளை கண்டிப்பாக நடத்த வேண்டும் என ஏற்கனவே அறிவுறுத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் மாணவர்கள் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர். அரியர் தேர்வு ரத்து குறித்து ஏற்கனவே விளக்கம் அளித்திருந்த தமிழக அரசு, இது பேரிடர் சட்ட விதிகள் மற்றும் யுஜிசி நடைமுறைகளுக்கு உட்பட்டு எடுக்கப்பட்ட முடிவு என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Hello sir when you will send the 1st yr & 2&3 rd yr arrear results ?