கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்க இன்னும் 1 வருடம் ஆகும் – ஆராய்ச்சியாளர்கள் தகவல்..!

0

கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க இன்னும் ஒரு வருடம் ஆகும் என அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்ட உள்ள ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

1300 பேர் பலி..!

சீனாவில் ஹவான் நகரில் தொடங்கி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸினால் இதுவரை அங்கு 1300க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்து உள்ளனர். மேலும் இது உலகம் முழுவதும் 24 நாடுகளுக்கு பரவி உள்ளது. தினமும் உயிரிழப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

12 மாதங்கள் ஆகும்..!

கொரோனா தடுப்பு மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக பேராசிரியர் பால் யாங் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மருந்து கண்டுபிடித்து அதனை விலங்குகளுக்கு கொடுத்து வெற்றிகரமாக சோதனை செய்து முடிக்க 4 முதல் 6 மாதங்கள் ஆகும். பிறகு ஆராய்ச்சி கூடங்களில் மனிதர்களுக்கு இந்த தடுப்பு மருந்தினை பரிசோதனை செய்து வெற்றி அடைய 3 அல்லது 4 மாதங்கள் ஆகும்.

கொரோனா வைரஸிற்கு மருந்து கண்டுபிடித்தால் ரூ. 1 கோடி பரிசுத்தொகை – ஜாக்கி சான்..!

இத்தனை வழிமுறைகளையும் கடந்து மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அது உற்பத்தி செய்து, உரிமம் பெற்று விற்பனைக்கு கொண்டு வர 12 மாதங்கள் வரை ஆகும். எனவே தற்போதைக்கு மக்கள் சுகாதாரத்துறையினரின் அறிவுரைப்படி நடக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here