தமிழ் திரையுலகில் முன்னணி நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தற்போது ஊரடங்கில் ஊர் ஊராக சுற்றி வரும் இந்த ஜோடி தற்போது கோவாவில் உள்ளனர். ஆனால் இம்முறை தங்களது குடும்பத்தினரையும் உடன் கூட்டிச் சென்று உள்ளனர்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்:
விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தில் ஹீரோயின் ஆக நடித்தவர் நயன்தாரா. அதுவே அவர்கள் காதல் பயணத்தின் தொடக்கம். ஜோடியாக எடுக்கும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். நயன்தாராவை பார்ப்பதற்காகவே அவரின் தீவிர ரசிகர்கள் விக்னேஷ் சிவனை பின்தொடர்கின்றனர். இன்று நயன்தாராவின் அம்மா ஓமனா குரியன் பிறந்தநாளை குடும்பத்துடன் ஒரு கோவா தனியார் ரிசார்ட்டில் கொண்டாடி உள்ளனர்.
கேக் வெட்டும் போட்டோவை பதிவிட்ட விக்னேஷ் சிவன், “பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அன்பான அம்மு குரியன்,” என பதிவிட்டு உள்ளார். ரசிகர்களும் தங்கள் பங்கிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில், எங்களுக்கு இடையே இருக்கும் காதல் எப்போது சலித்துப் போகிறதோ அன்று தான் எங்களது திருமணம் என விக்னேஷ் சிவன் கூலாக தெரிவித்தார்.
அதற்கு முன்னர் தனது அம்மா நீச்சல் குளத்தில் விளையாடும் போட்டோவை பதிவிட்ட விக்னேஷ் சிவன் “என் அம்மாவின் முகத்தில் உள்ள புன்னகை எங்கள் இதயங்களின் மகிழ்ச்சியைப் பிரதிபலிக்கிறது. பெற்றோரை மகிழ்விப்பதை தவிர வேறொன்றிலும் திருப்தியையும், முழுமையையும் காண முடியாது. வாழ்க்கையின் மிகப்பெரிய குறிக்கோள் அவர்களை மகிழ்விப்பதாகும்” என்று உணர்ச்சி பொங்க கூறியுள்ளார்.