இந்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் போட்டிகளுக்கு சீன நிறுவனம் ஆன விவோ தன் “டைட்டில் ஸ்பான்ஸர்” என்பதில் இருந்து விலகி உள்ளது.
ஐபிஎல் போட்டிகள்:
கொரோனா காலத்தால், கடந்த சில நாட்களாக எந்த ஒரு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவில்லை. இதனால், ரசிகர்கள் அனைவரும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர்.
ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்
ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இந்தியன் பிரீமியர் லீக் நிர்வாக சபை கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் நடத்த படும் என்றும், செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்று தெரிவித்து இருந்தது. இது 53 வது போட்டி ஆகும்.
10 போட்டிகளில் மதியம் நடக்கும். இந்தியாவில் கொரோனா காரணமாக துபாய், ஷார்ஜா மற்றும் அபுதாபி போன்ற நகரங்களில் நடக்க உள்ளது. இன்னும் அரசின் அனுமதி பெற்று கூடுதல் விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தனர்.
இந்த ஆண்டு ஸ்பான்ஸர்:
இப்படி போட்டி நடக்கும் என்றால் , யார் இந்த போட்டிக்கான ஸ்பான்ஸர் என்ற கேள்வி எழுந்தது. கடந்த சில வருடங்களாக விவோ தான் ” டைட்டில் ஸ்பான்ஸர்” என்ற நிலையில் உள்ளது. 2018 ஆம் ஆண்டு ரூபாய் 2, 199 கோடி கட்டி ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போட்டது. ஆனால், இது ஒரு சீன நிறுவனம்.
தற்போது இருக்கும் சூழ்நிலையில், இந்த நிறுவனம் தான் டைட்டில் ஸ்பான்ஸரா என்று குழப்பங்கள் நீடித்து வந்தது. கடந்த சில நாட்களாக விமர்சனங்கள் அதிகமாக இருந்ததால் விவோ விலகியது.
தெரு நாய்க்கு ‘சேல்ஸ் மேன்’ பணி வழங்கிய ஹூண்டாய் நிறுவனம்!!
இப்படி இருக்க , ஐ.பி.எல் ஆளும் குழு உறுப்பினர் கூறியதாவது” எங்களது அனைத்து ஸ்பான்ஸர்களும் எங்களுடன் தான் உள்ளனர்” என்று கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் லடாக் எல்லை பிரச்னை விவகாரத்தால் இது போன்ற விமர்சனங்கள் விவோ நிறுவனத்திற்கு எதிராக உள்ளது.