தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளது. உலகில் தங்க நகையை அதிகம் விரும்பும் நாடான இந்தியாவில் அதன் விலை வரலாறு காணாத அளவு உயர்வதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
இன்றைய விலை நிலவரம்:
கொரோனா ஊரடங்கு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கு தொழில்துறைகள் முடங்கியதும், முதலீட்டாளர்கள் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்புவதும் தான் முக்கிய காரணம். இந்தியாவில் அதிகம் விரும்பப்படும் தங்கம் ஆபரணப் பொருளில் இருந்து முதலீட்டு பொருளாக மாறுவது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதன் மீதான முதலீடுகள் தினமும் அதிகரித்துக் கொண்டே வருவதால் விலை இன்னும் பல மடங்கு உயரும் என நிபுணர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 16 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
இன்று மாலை சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை 38 ரூபாய் அதிகரித்து ரூ. 5,075 ஆக உள்ளது. ஒரு சவரன் 304 ரூபாய் உயர்ந்து ரூ. 40,600 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த வரலாறு காணாத உயர்வு தங்கத்தை அதிகளவு விரும்பும் இந்தியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.