கொரோனா வைரஸ் தொற்று அதிகரிப்பு காரணமாக பீகாரில் மாநிலம் தழுவிய ஊரடங்கு ஆகஸ்ட் 1 முதல் 16 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
இந்திய அளவில் பீகார் மாநிலத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்று குறைவாகவே உள்ளது. தற்போது வரை 13,000 க்கும் மேற்பட்டோர்க்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் தொற்று பரவல் வரும் காலங்களில் வேகமாக அதிகரிக்கும் என்பதால் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அந்த காலகட்டத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த அரசாணையும் தற்போது வெளியாகி உள்ளது.